search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கீதம்"

    • காணொலி முயற்சி வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்பிக்கிறது.
    • காணொலி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

    தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய காணொலி படைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், சரோஜினி நாயுடு, அம்பேத்கர், மவுலானா அப்துல் கலாம் அசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அச்சு அசலாக நம் கண்முன்னே கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அவர்களின் குரல்களில் தேசிய கீதம் பாடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த காணொலி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

    மேலும், இந்த முயற்சி வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்பிக்கிறது. சுதந்திர தினத்தன்று நாட்டின் முக்கிய தலைவர்களை அவர்களின் வடிவத்தில் நெருங்கி காணவும், அவர்களுடன் கொண்டாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதோ அந்த காணொலி..

    • ஸ்ரீநகரில் சைக்கிள் ஓட்ட நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது.
    • போலீஸ் இசைக்குழு மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

    ஸ்ரீநகர்

    காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த மாதம், போலீஸ் ஏற்பாட்டில் நடந்த சைக்கிள் ஓட்ட நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது. துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா பங்கேற்ற இந்த விழாவின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    அப்போது அதற்கு மரியாதை அளிக்கும்வகையில் சிலர் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எழுந்து நிற்பதை உறுதி செய்யாத சில போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதை ஸ்ரீநகர் போலீஸ் மறுத்துள்ளது.

    அதன் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், 'தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சில போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் ஒரு தவறான தகவல் உலா வருகிறது.

    ஆனால் இந்த விவகாரத்தில் 12 பேர் மீது சட்டரீதியான நடவடிக்கைதான் எடுக்கப்படுகிறது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நிற்பதை உறுதி செய்யாத போலீஸ் இசைக்குழு மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் என்பவர் சேரில் அமர்ந்தபடியே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் தற்போது பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் கடந்த 28-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொம்மை குட்டை மேட்டில் நடந்தது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    இந்த விழாவில் கலெக்டர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    விழா நிறைவு பெற்றதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் என்பவர் சேரில் அமர்ந்தபடியே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதனை பார்த்த சக போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சிவப்பிரகாசத்தை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்ததாக கூறி சிவப்பிரகாசத்தை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார்.

    சஸ்பெண்டான சிவப்பிரகாசம் ஏற்கனவே வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் தற்போது பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன.
    • 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.

    உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார். புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.

    196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பத்மஸ்ரீ டெரகோட்டா முனுசாமி உடனிருந்தார்.

    • பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார்.
    • இன்று காலை தேசிய கீதம் பாட வேண்டுமென மகாராஷ்டிர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மும்பை:

    இந்தியா சுதந்திரத்தின் 76-வது ஆண்டு தொடங்கும் நிலையில், இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.

    பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் மூவர்ண கொடியை வீடுகளில் ஏற்றி அது குறித்து புகைப்படத்தை பதிவிடுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக் கொடி செல்பி படங்கள் பதிவேற்றப்பட்டன.

    இந்நிலையில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணிக்கு மக்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என மகாராஷ்டிர மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மாநிலம் முழுவதும் காலை 11 மணி முதல் 11.01 மணிக்குள் தேசிய கீதத்தை பாடி முடிக்க வேண்டும். மாநில அரசின் அனைத்துத் துறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது மத்திய அரசின் சுவராஜ் மகோத்சவின் ஒரு பகுதி என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    ×